பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சு.வே.ஈஸ்வரமூர்த்தியா பிள்ளையவர்களுக்கு "'* எழுதிய பாக்கள். பாசுரமும் செந்தமிழும் பண்புமறிந் தாள்கின்ற ஈசுரமூர்த் திப்பிள்ளை என்னு நண்ப- தேசுவளர் தூற்றுக் குடிவிட்டென் தூயமனை நீங்கிடநீ சாற்றியது கேட்டேன் தடுத்து. "( கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே - ஆகும் வடித்துத் தெளித்து மலரோடிட் டாலும் குடித்திடக் கைக்குநீர்க் குண்டு. உ தாழும் பொழுதெல்லாம் தந்தென்னைக் காத்தங்கு வாழும் அமுமசிசு வக்களையான் - ஏழும் இரண்டுமதிக் கோர்தடவை ஈந்துவரக் கேட்டுள்ளேன் திரண்டுவர அந்நிதிநீ செய். ஸ்ரீ. சி. விஜயராகவாசாரி யாரவர்களுக்கு எழுதிய பாக்கள். நல்லோரை ஆள்விசய ராகவாச் சாரிமன்னா இல்லோராய்ச் சார்ந்தயரும் என்னுரியர் - வல்லோராய் நிற்றற்கு வேண்டும் நிதியளித்தே யான் வீடு பற்றற்கு வேண்டுவன பார். க என்னுடைய நாவாய்க் கிருநிதிதந் தோர்க்கெல்லாம் என்னுடைய மெய்வணக்கம் ஈந்திடுவாய் மன்னுடைய 55