பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப.சு.நெ.பிள்ளைக்கு எழுதிய பாக்கள். மாதம் முதல் தோறும் வள்ளி தரும் ஐம்மூன்றும் ஏதமிலா தங்கவட்கே ஈந்திடுவாய்-- மீதமா வந்தாலோ அம்மான்பால் வாங்கியோ மீட்டியணி தந்தார்பால் தந்திருக்கச் செய். DEL வாராதும் அன்னாள் வழங்காதும் நின்றிடுமேல் சீரார் அணிவிற்றுத் தீர்த்தவற்றை - ஊரார் கடன்களை முன்னம் கழறியுள சொத்தால் கடன்கொடு கட்டிக் கழி. என்குறை என் கடன் என்மென்மைச் சொற்களை என்பகை காண எழுதாதே- அன்பன் இலகுபதி மூலம் எழுதுக யான்ஓர் இலகுபதி யாயிருக்க இங்கு. இலகுபதி மூலம் இயம்பும் அவற்றில் பலனற்ற சொல்லே பகரேல் - சிலவே மறையாகச் சொல்க மறந்தாயேல் எஃதும் இறையேனும் சொல்லேன் இனி. நீயும்நின் பின்னவனும் நேயமிகும் நாயகன்தன் தூய அடிசார்ந்து சொல்பவற்றை- நேயமொடு செய்து நிற்க தேயத்தே தீவினையேன் சேருமள வுய்யவிடேல் ஒன்றுமிவற் றுள். த .64 வாழ்'வின் செலவுகள் மற்றதன் விற்பனைகள் வாழ்விலேன் தற்சரிதை மற்றப்பா - தாழ்விலா நாதன் குறிப்போடும் நன்னிதி பத்தோடும் ஏதம் களைந்துடன் ஈ. 69 + 01