பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல், L சாக. இருளென் கிளவி வெயிலிய னிலையும். 'இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் அதவிற்று. இன்:- இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும் - இருள் என்னும் சொல் (வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்) வெயில் என்னும் சொல்லின் இயல்பிலே . (நின்று அத்தும் இன்னும் பெற்று) முடியும். உ-ம்:- இருளத்துக் கொண்டான், இருளிற் கொண்டான்; சென்றான், தத்தான், போயினான் எனவரும். (ma) சாச, புள்ளும் வள்ளுக் கொழிற்பெய ரியல, இதுவும், அவ்வீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நதலிற்று, இ-:--புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல் - புள் என்னும் சொல்லும் வள் என்னும் சொல்லும் (வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்சன்லும் ஞசார ஈற்றுத் ) தொழிற்பெயர் இயல்பிற்றுய் (உன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வகாத்தும் உகரம் பெற்றும்) முடியும். . உ-ம்:--புள்ளூக்கடி.சி, வள்ளுக்கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, கண் டது, மாண்டது, வலிது எனவும்; புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை; ஞா ற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இதனைத் தொழிற்பெயரெல்லாம்” என்றதன் பின் வையாத முறையன்றிய கற்றினான், இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவும் கொள்க. உ-ம்:--புட்கடிது, வட்டிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, தீண்டது, மாண்டது, வலது எனவும்: புட்கடுமை, வட்கடுமை; சிறமை, நீமை, பெருமை; ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இன்னும் அதனானே, பள் என்பதன் கண்ணும், கள் என்பதன் கண்ணும் இருவழியும் இவ் விரு முடிபு பெற்றவழிக் கொள்க. பள்ளுக்கடிது, கள்ளுக்கடிது; பன்ளுக்கடுமை, கள்ளுக்கடுமை எனவும்: பட் கடிது; கட்கடிதி; பட்கடுமை, கட்கடுமை எனவும் ஒட்டுக. சாடு. மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவி தக்கவழி யறிந்து வலித்தலு முரிந்தே. இது, மக்கள் என்னும் உயர் தினைப் பெயருக்கு “'உயிரீறாகிய வுயர் திணைப் பெய ரூம்” (தொகை மாபு - சூத்திரம் யக) என்பதனுள் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதவிற்று. இ-ள்:-- மக்கள் என்னும் பெயர்நிலை கிளவி - மக்கள் என்னும் பெயர்ச் சொல்லின் இறுதி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து-இயல்பேயன்றித் ) நக்க இடம் அறிந்து வல்லொற்றாய் {த்திரிந்து) முடிதலும் ஆம். தக்சவழி' என்றதனான், அம்மக்கள் உடம்பு உயிர் நீங்கிய காலத்து இம் முடிபு . எனச்சொள்க.