பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

63



அம் மலருக்குப் பெயர் அழகுத் தமிழ்ப்பாவை வந்து கொஞ்சுகின்ற நீலக்குவளை!

அழைத்தாயா குவளையே? என்று நான் அருகில் சென்றேன்!

எட்டாத தொலைவிலிருக்கும் இந்த வானத்தின்கண் ஒளிரும் நிறம் கருநீலம்.

ஆழ்கடலின் நிறமும் அதுவே!

வானத்தை மாயமெனில், வாரியினை மாயமெனில் ஞாலத்தில் எது உண்மை; நவில்வீர்!

கருநீலம் உள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும்: தொட்டுப் பார்த்தவரோ தொல்லுலகில் யாருமில்லை!

விசும்பை அளந்தறியோம்! ஆழியை அளந்தறியோம்!

அளவுக் கடங்காது! அள்ளவள்ளக் குறையாது!

களவதனை எவரும் செய்யார்! இந்தக் காட்சிக்குக் கருப்பொருளாய் வந்த கரு நீலம்; ஆழத்தின் இலக்கணமாகும்!

சிரம் பழுத்த தென்னாட்டுப் பேரறிஞன் அறிவாழத்தை; மரம் மட்டைகள் கணக்கிட்டு அறிந்திடுமோ!

உரமுள்ளோர் எத்தனை பேர் - அவரை நெருங்கினார்!

நின்றெரியும் அவரின் அறிவை உண்டு எத்தனையோ பேர் ஊர் போனார் என்று உனக்குத் தெரியாது?

கத்தும் கடல் குடித்தான் குறுமுனிவன் கன்னித் தமிழ் குடித்தார் - இந்தப் பேரறிஞர்!

குறள் படித்த இந்த மூதறிஞன் விரல்; தொட்ட இடமெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்!

அன்னோன் அறிவாழம் கண்டார் - யார்?

ஆழத்தின் நிறங்கண்டார், மவுனத்தில் தான் ஆழ்ந்தார்!

அன்னவரை நோக்கி ஓடிவிட்ட எதிரியின் உயிரெல்லாம்;

மீண்டும் திரும்பாமல்