இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்129
பார்த்துக் கொள். மூக்கா, உனக்குச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாச்சு. எங்கே இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும்,மன நிறைவோடு சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்க. எங்களுக்குக் கடிதம் எழுத மறக்க வேண்டாம். சரி, நாங்க வாறோம்” என்று விடைபெற்றான் முத்துமாலை.
ராமதுரையும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
புதுமணத் தம்பதிகள் கண்கலங்க வணக்கம் தெரிவித்தார்கள்.
“இது இப்படி முடியும்னு நான் நினைக்கவேயில்லை” என்று ராமதுரை முத்துமாலையிடம் சொன்னான்.
“காலம் வழி அமைத்துக் கொடுக்கிறது. வாழ்க்கை தன் போக்கில் முன்னேறுகிறது” என்றான் முத்துமாலை.
“அம்மாவை எப்படி சமாதானப்படுத்தப் போறேனோ எனக்கே தெரியலே” என்று நெடுமூச்சுயிர்த்தான் துரை.
“எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்” என்று முத்துமாலை ஆறுதல் கூறினான்.