பக்கம்:இருட்டு ராஜா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126இருட்டு ராஜா

 மீண்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு உதவியது.நீலாவும் மூக்கனும் வள்ளிக்குகையை பார்த்துவிட்டு அவர்களும் நேரே வந்து மாட்டிக் கொண்டார்கள்.

“வாங்க வாங்க! ரொம்பவும் எதிர்பாராத சந்திப்பு” என்று உற்சாகமாக வரவேற்றான் முத்துமாலை.

இவர்களை அங்கே எதிர்பார்த்திராத நீலாவும் மூக்கனும் திடுக்கிட்டுத் திகைத்துத் திகிலடித்துப் போய் நின்று விட்டார்கள். நீலா மூக்கனின் முகத்தைப் பார்த்தாள். அண்ணனைப் பார்த்தாள். முத்துமாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டு அவன் கண்களை சந்திக்க முடியாதவளாய் தலை குனிந்தாள்.

மூக்கன் கலவரமடைந்தவனாய் திரு திரு என்று விழித்தபடி நின்றான். அவன் பார்வை கடலின் பக்கமே நிலைத்திருந்தது.

முத்துமாலைதான் சீண்டினான். “முருகன் வள்ளி திருவிளையாடல் மாதிாி நீலா மூக்கன் திருவிளையாடலா? எந்த மட்டிலே நிக்குது? முருகன் லீனை வள்ளி திருமணத்திலே முடிஞ்சிது. மூக்கன் லீலை நீலா திருமணத்தை எட்டிப் பிடிச்சாச்சா? என்னமோ சொல்லுவாங்களே? நல்ல வார்த்தையில்லா ? ... ஆங். ஆங், தேன்நிலவ யாத்திரை நடக்குதோ இப்போ!”

நீலாவின் கண்கள் கலங்கின. நீரைச் சிந்தின.

ராமதுரை கோபத்தோடு அவளையே முறைத்து பாா்த்துக் கொண்டிருந்தான் “நீலிக்கு அழுகை எவரெடியா இருக்கும்னு சொல்லுவாங்க.செய்யறதை செங்சுபோட்டு அழுகை வேறயா? பாசாங்குக்காரி. நல்ல நடிக்கத் தெரிஞ்ச ஏமாத்துக்காரி. எத்தனை நாளாகட்டீ இப்படித் திட்டம் போட்டிருந்தே? அம்மை மூஞ்சிலேயும் எம்மூஞ்சிலேயும் இப்படிக் கரியை அள்ளிப் பூசணும்னுட்டு?...” என்று பொரிந்து தள்ளினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/128&oldid=1140055" இலிருந்து மீள்விக்கப்பட்டது