பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் 441 தலைவி : (சினந்து, ஒருஉநீ எம்.கூந்தல் கொள்ளல்யாம் நின்னை வெரூஉது காணும் கடை!! தலைவன் : தெரியிழாய், செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் மெய்பிரிந் தன்னவர் மாட்டு, தலைவி : @TL一f丁。 நினக்குத் தவறுண்டோ? நீவீடு பெற்றாய் இமைப்பின் இதழ்மறைபு ஆங்கே கெடுதி! நினைப்பா லறியினும் நின்னைப் புலப்பா ருடையவர் தவறு! தலைவன் : அணைத் தோளாய், தீயாரைப் போலத் திறனின்று உடற்றுதி காயுந் தவறிலேன் யான்! தோழி : மான் நோக்கி நீயடி நீத்தவன் ஆனாது நாணில னாயின் நவிதந் தவன்வ்யின் ஊடுதல் என்னோ? இனி. தலைவி : 3. (தனக்குள்) இனி, யாதுமீக் கூற்றம் யாமிலம் என்னும் தகையது காண்டைப்பாய் தெஞ்சே! பணியானப் பாடில்கண் பாயல் கொள! - (காட்சி நிறைவுற்றுத் திரை வீழ்த்தப்பெறுகின்றது,)" (ஒருஉ விலகிப்போ கானும் கடை-காணும் பொழுது: யாங்கு-எவ்வாறு; நிலைப்பால் அறியினும்-நின்னுடைய நிலைமையின் கூறுபாடுகளை அறிந்து வைத்தும்; நீத்தவன்-பிரிந்தவன்; மீக் கூற்றும்_மேலே கூறும் சொல்; காண்டைப்பாய்-காண்பாய் (வினைத்திரிசொல்) மருதக்கலி-22. (இது தரவும் போக்குமின்றி ஐஞ்சீர் அடுக்கி வந்த உறழ் கலி.