பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 - அகத்திணைக் கொள்கைக்ள் தாயறி வுறுதல் செவிலியோ டொக்கும்." என்ற தொல்காப்பியரின் விதியால் பின்னர்க் குறிப்பிட்டது பெறப்படும். தலைவியின் நடத்தையில் தான் காணும் ஒரு சிறு வேறுபாடும் அவளை ஐயுறத் துண்டும். முதிர்கறி யாப்பின் துஞ்சும் நாடன் மெல்ல வந்த நல்லகம் பெற்றமை மையல் உறுகுவள்,அன்னை: ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே (கறிமிளகுக் கொடி, யாப்பின் - பி ன் னி யி ரு ப் ப த ன் கண்ணே, நல்லகம்-மார்பு: மையல்-மயக்கம்; கடுங் 3 x 4 i கூவினள்-கருங்குரலால் கூவுகின்றனள்) என்று தோழி கூறுவதனால் நற்றாய் ஐயப்படுவதனை அறிய லாம். தந்தை தலைவியைத் திணைப்புனக் காவலுக்குப் போகு மாறு கூறுகின்றான். ஆனால் அன்னையின் நோக்கம் மாறாக இருந்தது. 'நன்னாள் வேங்கையும் மலர்கமா, இனியென என்முகம் நோக்கினள். எவன்கொல்? தோழி! செல்வாள் என்றுகொல்? செறிப்பல் என்றுகொல்? கல்கெழு நாடன் கேண்மை அறிந்தனள் கொல்லஃது அறிகலேன் யானே.” என்று தோழி கூறுவதனாலும் நற்றாய் தன் மகள் நடத்தையில் இயறுவது பெறப்படுகின்றது. ஐயப்படுகின்றவள் செவிலியை அது குறித்து வினவவும் செய்வள். . . . . கண்ணும் சேயரி பரந்தன்று துதலும் நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே; ஆங்கமை மென்றோள் மடந்தை யாங்கா யினள்கொல்? என்னும்என் நெஞ்சே." என்ற சிற்றெட்டகச் செய்யுளால் நற்றாய் ஐயப்பட்டு வினவுவதை அறியலாம். செவிலி முன்னிலை மொழியால் அறத்தொடு நின்று உற்றதனை அவளுக்கு உரைப்பாள். இதனை நாற்கவிராச நம்பி, AHHSHMMMMAAS00MMAAA AAASA SAASAASSAAAAAASAAAA 10. டிெ - 48 (இளம்). 11. நற்.297 12. @ു.-:06, 13. களவியல்-24 இன் உரை மேற்கோள், . - t