இல்லற நெறி 243
என்பது விதி. மிக்க சீற்றத்திலும் தலைவி தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் முறையன்று; எனினும், அவனுடைய காமக்கிழத்திய ரிடத்துத் தான் நடந்தொழுகும் மரியாதைபற்றியும், தலைவனது பரத்தமை கருதாது தான் கூடியொழுகுதல்பற்றியும் தலைவி குறிப்பால் தன்னை வியந்து கொள்ளுதல் கூடும்.
தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே.'45
என்பது தொல்காப்பிய விதி. - தலைவன் பரத்தையிற் பிரிந்து கரந்தொழுகுதல் தன் ஊரின் கண்ணே யல்லது வேற்று நாட்டு ஊர்களில் ஆகாது என்று கூறும் இறையனார் களவியல்.
பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே."46
என்பது விதி. தலைவன் பரத்தையருடனும் ஏனைய மனைவியருடனும் தன்னுார்க்குப் புறம்பாயுள்ள செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் போன்றவற்றிற்குச் சென்று இன்பநுகர்ச்சி எய்துவான். -
யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.'47
என்பது விதி. இதில் 'யாறும் குளனும் காவும் ஆடி' என்பதற்கு நச்சினார்க்கினியர் 'காவிரியும் தண்பொருநையும் ஆன்பொருநையும் வையையும் போலும் யாறுகளிலும், இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும், திருமருதத்துறைக்காவே போலும் காக்களிலும் விளையாடி’ என்று கூறுவர். காவிரிப்பூம்பட்டினத்தை யடுத்து இருகாமத்திணை யேரிகள் இருந்தமை பட்டினப்பாலையாலும்,48' சிலப்பதிகாரத்தாலும்"49 அறியலாம். மதுரையில் வையையை யடுத்துத் திருமருதந்துறை என்னும் உய்யானம் இருந்தமை கலித்தொகையாலும்"50 'பரிபாடலாலும்"51 தெளிவாகும்.
♔ു. 39. ప్లై இறை கற். 52 47. கற்பியல்-50 48. பட்டின. 39 49. சிலப். 9:59-62 - 50. கலி. 26. திருமருதமுன்றுறை. 51. பரிபாடல். 7 - வரி 83