பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அகத்திணைக் கொள்கைகள் இரவுக்குறிபற்றிய நற்றிணையில் ஒரு பாடல். பகற்குறி இடையிடுபட்ட தலைமகன் ஒருவன் இரவுக்குறி நேருமாறு தோழியை வேண்டுகின்றான். அவளும் அவனை நோக்கிச், சேர்ப்பனே, எம் மூர் இனிமையுடையதே. நீவருதலால் யாதொரு தவறும் இல்லை; தம் தம் உறவினரை ஒருவரையொருவர் இன்னார் இன்னார் என்று அறியாத மிகப் பெரிய ஊராகும் அது. ஆகவே அயலாராக வருவாரை எவரும் அறிதல் இயலாது. எனவே நீ தாராளமாக வரலாம் என இரவுக்குறிக்குப் பச்சை விளக்கு காட்டுகின்றாள். £ ; S S S S S S S S S S S 00 C 00 C AAAA S 0 S 0 ee C ee C TT C YY S YS S S SS C S C S C S இனிதே தெய்யனம் முனிவில் நல்லுiர் இனிவரின் தவறும் இல்லை எனையதுTஉம் பிறர் பிறர் அறிதல் யாவது தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே." (முனிவு - வெறுப்பு; தவறு - ஊறுபாடு; தமர் - உறவினர்; எனையதும் - எவ்வளவேனும்) இவண் நும்மூர் போன்ற தென்பாள் எம்மூர் இனிதே என் கின்றாள். அன்னை முதலாயினோர் ஐயமின்றி இருக்கின்றன ராதலின் குறிவயின் தவிராது வருதும் என்பாள் தவறும்இல்லை’ என்கின்றாள். நீ பிற நிலத்தினர் போன்ற கோலத்தோடு வரினும் எமர் அறிபவர் அல்லர் என்பாள் தமர்தம் அறியாச் சேரி என்கின்றாள். பகற்குறி இடையிடுபட்ட தலைவன் மேலும் களவில் ஒழுகாது உடனே தலைவியை மணந்து கொள்ளுதலே முறை. அங்ங்ணம் ஒழுகாது மேலும் களவொழுக்கத்தையே விரும்பி நிற்பானாயின் அஃதறிந்த தோழி அவன் பகல்வரவினைத் தடுத்து இரவுக்குறி நேர்வாள். மேற்கூறிய செய்யுள் இதுபற்றி வந்த தாகும். இரவுக்குறியில் தலைமகன் தலைமகளை நுகர்ந்தும் நுகர் ಹಣ மகிழ்ந்து மலர்விக்கும் நிகழ்ச்சியொன்றினை திருச் சிற்றம்பலக் கோவையாசிரியர் மிக அழகாகக் குறிப்பிடுவர். 28. டிெ - 40 (நச். உரை). இவ்வுரை இறையனார் களவியல் "இரவு மனை இகந்த (நூற்.21) என்ற நூற்பாப் ಶ್ಗ முரணுகின்றது. 29, நற். 31 بہ