பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


களை நசுக்கவேண்டும் என்று எனக்கு ஆத்திரம் பற்றுகிறது.

உண்மையாக யார் உயர்ந்தவர்களோ, யார் உத்தமர்களோ, நியாயப்படி யாருக்கு வாழ்க்கை வசதிகள் சேரவேண்டுமோ, அவர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள்; வயிற்றிலடிக்கப்படுகிறார்கள்; அடக்கி ஒடுக்கி வாயில்லாப்பூச்சிகளெனத் திரியும்படி பழக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இச்செயலுக்கு சாதகமாகச் சிருஷ்டிக்கப்பட்ட எத்து வேலைகளே கடவுள், விதி, கர்மம் முதலிய பொய்மைகன்.

மனிதர் மனிதராக வாழ வேண்டுமானல். இத்தகைய முட்டாள்தனமான, குருட்டுத்தனமான பொய்மைகளுக்கு, பசப்பு வார்த்தைகளுக்கு,பாழ்மை எண்ணங்களுக்கு சாவுமணி அடித்தாக வேண்டும்.

உழைப்போர் உரிமையுடன் வாழ வகை செய்யாத சமுதாயத்துக்கு. சமூக தர்மங்களுக்கு, போலி கெளரவங்களுக்கு அடியுங்கள் சாவுமணி!

புதுயுகம் பிறக்க வேண்டுமா? புதிய உலகம் அமைக்கப் பெறவேண்டுமானால், புதிய சமுதாய அமைப்பு தலைதூக்கவேண்டுமானால், சமூக முன்னேற்றம் தேவையானால்

அடியுங்கள் சாவுமணி -
மக்களின் அறியாமைக்கு.
மக்களை அறிவில்லாதவர்களாக்க முயலும் மடத்தனத்துக்கு,