இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
எத்தனைதான் பாதுகாப்பா யிருந்தும், ஒர்நாள்
இணைபிரியாத் தம்பியவன் காய்ச்சல் கொள்ளப்,
பத்திரமாய் மேடையிலே படுக்க வைத்துப்
பசிப்பிணிக்கு மருந்து பெற, வண்டி ஒரம்
சித்திரம்போல் நடக்கையிலே-முதல்வ குப்புச்
சீமானின் விழிவலையில் சிக்கி விட்டாள்!
பத்துருபாய் பணத்தாளைக் காட்டி, மிக்கப்
பக்குவமாய்ப் பேச, ஒரு கணம்அ யர்ந்தாள்!
வண்டி, உடன் புறப்படவும், பெட்டிக் குள்ளே
வகையாகச் சிக்கியவள் நிலையு ணர்ந்தாள்.
கண்டிராத பணத்தாலே கற்பை வாங்கக்
கண்ணிருந்துங் குருடனை சீமான் எண்ணிப்...
பெண்டாள முனைகையிலே விரலேப் பற்றிப்
பெருங்காயம் உண்டாகக் கடித்து விட்டாள்!
அண்டையூரில் வண்டி நிற்கக், குதித்தி றங்கி,
அருந்தம்பி மகிழ்ந்திடவே ஓடிச் சேர்ந்தாள்!
8