இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
தத்துவத் தார்க்குச் சேர்த்துத்
- தனியிடம் மறைந்து நின்றாள்;
பித்தனாய் மாறி னாற்போல்
- பெருங்குர லெழுப்பி அன்னார்,
"சித்தமே அறிந்தி டாது
- சென்றாயே, உயிரே உன்னை
நித்திய கன்னி யாய்என்
- நினைவிலே பதித்திருந்தேன்!
தனியனாய் வாழ மாட்டேன்
- தங்கமே உனப்பி ரிந்தே
இனியெனக் கென்ன வேலை ?
- என்கல்வி உன்னைக் கொன்ற
சனியனே?’ எனச்ச பித்துத்
- தற்கொலை செய முயன்றார்,
"இனிமையின் எல்லை கண்டேன்.
- எனையாள்வீர்!" எனத் தடுத்தாள்!
- எனையாள்வீர்!" எனத் தடுத்தாள்!
32