இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
நினைத்தவா றின்ப வாழ்க்கை
- நேர்ந்ததாய் நம்பிக் கைதான்!
தினைத்துணை அன்பும் இன்றித்
- தேன்நிலவு இனிப்ப தெங்கே?
'பனைத்துணை படித்திருந்தும்,
- பக்குவம் பெறாத வர்பால்
அனைத்துமே பாழ் பாழ்', என்றே
- அரற்றினாள் பருவக் கிள்ளை!
வீசிடுந் தென்றற் காற்றில்
- மிதந்திடும் மலரின் வாசம்
காசியைத் தொடுவ தில்லை;
- நல்வினை நரம்பு போலப்
பேசிடுந் துணைவி சொற்கள்
- பெருங்காதில் வீழ்வ தில்லை;
கூசிடா ஒப்ப னைகள்
- கொண்டவர் காண்ப தில்லை!
- கொண்டவர் காண்ப தில்லை!
30