பக்கம்:கனியமுது.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


வேடம் பலபூண்டு வேடிக்கை காட்டிடுவான்,
ஆடம் பரமில்லை, ஆர்ப்பரிப்பு தானுமில்லை,
தொல்லையில்லை; தூயோன்; துளியும் பணத்தாசை
இல்லையில்லை; என்றும் எனைப்பிரியான்; போதுமே!
கிட்டிவந்த சொற்பத்தில் கிள்ளை மகிழ்வுடனே
எட்டிவிட்டோம் இன்பத்தின் எல்லை எனஇருந்தாள்.
பேரிடி தாக்கியது பேதைப் பசுமரத்தில்!
ஆரிடம் கூவி அரற்றுவாள் இந்நிலையை?
கும்பி கழுவமட்டும் கோமாளி வேடத்தை
நம்பியிருந்த அவள் நாயகனைச் சூழ்ந்துகொண்டார்.
"என்னே உன தழகுக் கெங்கள் திரைப்படத்தில்
முன்னேற்றங் காண முயல்வோம்; விரைவாக
உச்சிக்குச் செல்வாய்; உயர்வாய்!" எனக்கூறி
மெச்சினார். இச்சையுற்றான் மேல்நிலைக்கும் சென்றிட்டான்.
மன்னன் அரண்மனை போல் மாளிகை, வாகனம்,
பின்னே அடிவருடப், பேச்சைச் செயலாக்கப்
பல்லோர் நிறைந்திட்டார் ! பம்பரமாய்ச் சுற்றியே

அல்லும் பகலும் அயராப் படப்பிடிப்பாம்!

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/136&oldid=1380259" இலிருந்து மீள்விக்கப்பட்டது