இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
தாயாகிப் பிள்ளை பெறும் இயந்திரம் போல்
தாங்கவொணாத் துயரத்தைச் சுமந்த தாலும்,
ஓயாத உழைப்பாலும் உடல்க லிந்தே—
உணவுக்கே அனுதினமும் போராட்டத்தால்
நோயாகிப் படுக்கையுடன் கிடக்க லானாள் !
கொடித்து வீழ்ந்த குதிரைக்குக் கால்முறிந்து
நாயாக நலிந்துயிரை விட்ட தாலே—
நைந்துமனம் நெகிழ்ந்துருகித் தேய்ந்துபோனாள்
சிறையிலுள்ள கைதிகளை கண்காணிக்கும்
செங்கோட்டான் குப்பண்ணன் பெயரைச் சொல்லி,
முறையுடனே அரைமாதம் விடுப்புத் தந்து
முடுக்கிவிட்டார் ! ஊர்நோக்கி வருவ தற்குள்—
குறைவாழ்வில் தவித்திட்ட கன்னி யம்மாள்
குழந்தைகளைக் கதறிவிட்டுப் போய் விட்டாளே!
நிறைவாழ்வின் கரைகண்டோன் தரையில் வீழ்ந்து
89