பக்கம்:அமிர்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தது, அக்காட்சி ஏதோ கனவில் நிகழுவது போன்றிருக்தது அந்த ஏழைப் பாட்டாளி சுந்தனுக்கு. தலையை உயர்த்தினான். அவனுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது. அழகு சொட்டும் கட்டழகி யொருத்தி தன்னை விழுங்கி விடுபவள் போல அவ்விதம் வைத்த கண்வாங்காமல் உற்று நோக்குவதைப் பார்த்தான்.கண நேரம் அவன் பார்வை அப்பெண்மீது சுழன்றது. அவளும் தன்னைப் போல ஓர் ஏழை என்பதை உணர்ந்தான், அப்போது அவள் தோன்றிய நிலையிலிருந்து, அவன் உடலில் புளகாங்கிதம் போர்த்தியது.

   “இரண்டணா!" ஆமாம்; வாழ்வின் விசித்திரப் போக்கிலே ஒரு ஏழையைக் கண்டு மற்றொரு ஏழையின் உள்ளம் தான் இளகுகின்றது!
   கழைக்கூத்தாடி சந்தன் ‘ சலாம் ' போட்டான் அந்தப் பெண்ணுக்கு. அதுவே அவனது என்றென்றும் மறக்க முடியாத உளமார்ந்த நன்றியின் சின்னம் போலும்!
  கூட்டத்தைச் சுற்றி முடிந்து திரும்பவும் அதே இடத்திற்கு வந்ததும், அவன் அவளைக் காணவில்லை. தனக்கு உரித்தான கைப்பொருள் ஒன்றினைக் கைகழுவ விட்டது போன்ற ஓர் ஏக்கம அவனுள் பொங்கி எழுந்தது.
   தெளிந்த நீரோடை போன்றிருந்த அவன் உள் ளத்தைத் தொட்டுக் கலக்கிச் சென்றுவிட்டாள் அவ் வனிதை. அத்தி  பூத்தது போன்றிருந்தது அவளைக் கண்டதும், ஆனால் கணப்பொழுதில் கோடைக்கால ' மின்னல்போல எங்கோ மறைந்துவிட்டாளே! .
   அவன் சித்தம் குழம்பிவிட்டது. ஒன்றிலும் அவன் மனம் நாடவில்லை. அன்றைய இரவைப் பகலாக்கிக் கழித்தான். சதா அவள் நினைவுதான். அவளது களை சொட்டும் சிரித்த முகம் அவன் முன் அடிக்கடி தோன்றியவண்ணம் இருந்தது. முன் பின் தெரிந்திராத அந்தப் பெண் நினைவு அவன் மனதில் எழும் சமயமெல்லாம், அவனையும் அறியாத ஓர் இன்பம் இழைபின்னிச் சென்றது.
  அடுத்த நாள் வித்தை செய்வதையும் மறந்து, பைத்தி யம் பிடித்தவன் போல அங்குமிங்குமாக அலைந்துகொண்

66 )

66

}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/68&oldid=1333032" இலிருந்து மீள்விக்கப்பட்டது