இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“மாணிக்கம் அண்ணுச்சி ரொம்ப பாக்கியம் செஞ்சதுதான். இல்லாதபோனா, அந்தக் காலத்திலே தேவர்கள் அசுரர்களோடே சண்டைபோட்டு அமிர்தத்தைக் கடைந்து எடுத்ததாகக் கேள்விப் படறபோது, அண்ணனுக்கு அமிர்தம் இவ்வளவு லகுவிலே கிடைச்சது அதிர்ஷ்டம் தானே?” என்று பொங்கும் புளகிதத்தோடு பூவாயி கேலி செய்வதைக் கண்ட மாணிக்கத்தின் அப்போதைய நிறைந்த மனதின் நிலையை எப்படி வர்ணிக்க முடியும்?
பொன்னி அச்சகம், சென்னை-21