பக்கம்:அன்பு மாலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அன்பு மாலை


ஓங்காரத் தனிப்பொருளாய் உற்ற ஐயன்,
உலாவருநல் மயில்மேலே போந்த கந்தன்,
தேங்கார்வ முடன்போற்றும் அன்பர்க் கெல்லாம்
திருவருளைச் செய்கின்ற தீரன், அன்று
தாங்கார்வ முடன்சீதை தனைமணந்த
சச்சிதா னந்தனென யாரும் போற்ற
ஓங்காநின் றான்நல்ல அருணை தன்னில்
உறுகின்ற ராமசுரத் குமாரன் தானே.

179


வழக்கெல்லாம் தீர்க்கின்ற வகையைப் போலே
மனம்அலைச்சல் படுகின்ற வண்ணம் நீங்கி
இழுக்கறவே நிற்பதற்காம் வழியைச் சொல்லி
எஞ்ஞான்றும் உபசாந்த நிலையை மேவச்
சழக்கறுக்கும் பதம்வரவே சாற்று கின்றான்;
சச்சிதா னந்தந்தான் காட்டு கின்றான்;
அழுக்கறுக்கும் மாயோகி, அருணை தன்னில்
அவிர்ராம சுரத்குமார் அண்ணல் தானே.

180

காலமெலாம் காத்திருந்தும் கருணை செய்யாக்
கடவுளர்கள் பலருள்ளார்; அவரை நாடிச்
சாலநனி பத்திசெய்து துதிகள் பாடிச்
சார்ந்தாலும் பயனில்லை என்பார் பல்லோர்;
சீலமுறும் அருணைதனில் இருக்கும் ஐயன்
திகழ்ராம சுரத்குமார் தன்பால் சென் மின்;
ஒலமிடும் துயரமெலாம் போக்கு கின்றான்;
உயர்சாந்தி அடைவதற்கு நெறிசொல் வானே.

181


அழுக்குடையான் ஆனாலும் அழுக்கே இல்லான்;
அருமேனி புனல்படியான்; ஆனால் தூயன்;
இழுக்குடைய மாந்தர்தம் நெஞ்சம் எல்லாம்
இழுதுபோல் உருக்குகின்ற நேயன்; என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/73&oldid=1303524" இலிருந்து மீள்விக்கப்பட்டது