இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
அன்பு மாலை
பேசா மோனம் பெறஎண்ணின்
பீடார் இன்பம் கொளஎண்ணின்
ஆசா பாசம் துறந்துயர்ராம்
சுரத்கு மார்பால் அடைமின்கள்.
147
மூல பலத்தைப் போக்கிஅந்நாள்
மூளும் வெற்றி இராமன்பால்
கோல வந்த தென்பார்கள்;
குறுகும் நெஞ்சில் இருக்கின்ற
ஞால மாயை தனைப்போக்க
நாடு வாரும் உண்டுகொலோ?
சீலம் சிறந்த ராமசுரத்
குமரன் பாலே சென்றடைமின்.
148
போதம் வேண்டாம்; கல்வியிலே
பொற்பும் வேண்டாம்; மூச்சடக்கி
நாதம் காணும் யோகநிலை
நண்ணல் வேண்டாம்; அன்பினிலே
சீதம் நிறைந்த கண்ணிணையில்
செறிநீர் வார வந்திடுமின்; .
நாதன் ராம சுரத்குமார்
நன்மை யீவான் இவ்வுலகில்.
149
போதம் - அறிவு.
அன்பொன் றாலே உலகமெலாம்
அடிமை ஆக வைக்கின்றான்;
பொன்வைத் தாலும் வாராத
பொற்பை யெல்லாம் வைக்கின்றான்;
என்பெற் றிடினும் மனச்சாந்தி
இல்லா விட்டால் என்பயனாம்;
இன்புற் றிடவே ராமசுரத்
குமார்பா லேநீர் எய்திடுமின்.
150