பக்கம்:அன்பு மாலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

49

(பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மாதவம் புரிந்து பல நோன்புகள் இழைத்துடலம்
வருந்தவே கானிலெய்தி
வாழ்ந்திடும் முனிவோரும் கண்டிலா அப்பெரிய
உண்மையை மனம்கொள்ளுவான்;
சேதனா சேதனம் யாவையும் நீத்திடச்
செப்புவான், மோனஞானம்
திகழ்வதிந் நிலையிலே என்றுநற் பக்குவம்
சேர்ந்திடச் செய்தருளுவான்;
நீதமார் அன்பர்கள் நித்தலும் போற்றிடும்.
நேயமார் சுகுணஞானி
நேர்வரு வார்தமை மைந்தராக் காத்துநன்
நியமமார் தரச்செய்குவான்;
வாதமே தான்இலாச் சாந்தியம் புவனத்தில்
வளர்ந்திடும் பெரியஞானி;
மலையெனும் அருணையில் ராம்சுரத் குமாரென
வளர்பவன் சென்றுகாண்மின்.

120


நீதம் - நீதி.


(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


சத்தென்றும் இன்பமென்றும் ஆனந்தம் என்றும் ,
தனித்தனியே நிற்கின்ற பொருளெல்லாம் ஒன்றாய் வித்தொன்றும் முளையாகி மரங்கள்தாம் ஆகி
மேல்இவர்ந்த படியென்ன அருள்நிழலை ஈயும்
சத்தொன்றும் பெருமானைத் திருவருணை தன்னில்
தரிசனம்செய் தார்கள்தம் இன்னலெலாம் போக்கி
மத்தமொன்றும் மதியில்லா வகையினிலே சாந்தி
வழங்குவான் எனலங்கே வந்தவர்கள் காண்பார்.

121


இவர்ந்த- ஓங்கிய, இன்னல் - துன்பம், மத்தம் - மயக்கம். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/55&oldid=1304289" இலிருந்து மீள்விக்கப்பட்டது