பக்கம்:அன்பு மாலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

அன்பு மாலை


தூற்றறியான், கவலையெனச் சொல்லு கின்ற
தொண்டருக்குக் கவலையெலாம் தீர்த்து வைப்பான்;
சீற்றமிலான் சாந்தமெனும் நிலத்தில் செல்லும்
சீர்ஞானி ராமசுரத் குமார்தான் அன்றோ?

185

தேற்று அறியா - தெளிவை அறியாத, தூற்று - பிறரைத் தூற்றும் வசை.


பண்ணாத பெருந்தவத்தைப் பண்ணி னாலும்
பாசமெனும் வலையை நனிஅறுக்க லாமோ?
கண்ணுரும் ஒளிகொண்ட கருணை வள்ளல்,
கவின்சேர்ந்த இன்சொல்லான் குருவை நாடி
அண்ணால்என் றவனடியே இறைஞ்சி வீழ்ந்தால்
அப்போதே மலமெல்லாம் அறுந்து போகும்;
விண்ணாளும் கீர்த்தியுடை அருணை மேவும்
வியன்ராம சுரத்குமார் பாலே சென்மின்.

186

கவின் - அழகு.


தேனாகித் தேனுள்ளே சுவையு மாகிச்
சித்தத்துள் தித்திக்கும் அமுது மாகி
வானாகி மண்ணாகி வளியு மாகி
மற்றுள்ள பூதமாய் வயங்கு வானைத்
தானாகிக் காட்டுகின்ற தன்மை யாளன்,
சராசரத்தின் உயிராகிச் சார்ந்து நிற்பான்;
ஊனாகி உயிராகி இருக்கும் அண்ணல்,
உயர்ராம சுரத்குமார் அவனே கண்டீர்.

187

வளி - காற்று, ஊன் - உடம்பு.


அத்துவிதச் செம்பொருளை ஆனந் தத்தின்
அருட்கடலை மெய்ஞ்ஞான மாய குன்றைத்
தத்துவத்தின் வடிவதனைச் சாந்த மென்னும்
தரையினிலே நடமாடும் பெரிய கோவைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/75&oldid=1303528" இலிருந்து மீள்விக்கப்பட்டது