பக்கம்:அன்பு மாலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

39

தார்வந்த மாலை கழுத்தணி
கின்றான்,தயைபுரிவான்,
நேர்வந்த கீர்த்தியான் ராம,
சுரத்குமார் நீள்முனியே. 91

குழந்தையென் றோதக் குதுகலிப்
பான்ஓர் குறையுமிலான்
தொழுந்தொறும் அன்பர்கள் இன்பச்
சுகம்பெறச் சூழருளை
விழுந்தயை யோடு தருகின்ற
வன்தொல் வினைப் பிறப்பில்
அழுந்துறா மல்காக்கும் ராம
சுரத்குமார் ஆம்தவனே! 92
விழும் - விரும்பும்.
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பலகற்றும் பலசொற்றும் பாங்கறியா திருக்கும்
பாமரர்கட் கென்னசொல்வேன் பண்ணவர்கள் போற்ற
மலைபெற்ற வாறதுபோல் மாமுனியைப் பெற்றோம்:
வணங்குகின்றார் வினையெல்லாம் போக்குகின்ற கங்கை;
கலைபெற்ற அறிவெல்லாம் இவன்முன்னே தூசாம்:
காதலுறப் போற்றுபவர் இவன்பெருமை கண்டார்:
நிலைபெற்ற அருணையிலே நிமிர்ந்துநிற்கும் ஐயன்
நீதியுடை யான்ராம சுரத்குமார் முனியே. 93
பண்ணவர்கள்- தேவர்கள்.
மலமூன்றும் போவதற்கு வழிசொல்வான்: என்றும்
மாயையெனும் வலைக்குள்ளே சிக்காமல் காப்பான்;
வலமுடைய திருவருளைப் பாதுகாப் பாக்கி
மனங்குமுறா வண்ணம்நற் சாந்தியினைத் தருவான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/45&oldid=1303382" இலிருந்து மீள்விக்கப்பட்டது