34
அன்பு மாலை
அடியோங்கள் என்றே அருஞ்செல்வர்
வந்தார்; அடர்கல்வியில்
பிடியோங்கும் நல்ல புலவர்கள்
வந்தார்; பெரும்பலமார்
துடியார்ந்த மேனியர் வல்லவர்
வந்தார்; துகளறுத்தார்:
வடிவார்ந்த ராம சுரத்குமார்
பாதம் வணங்கினரே.
பிடி - பிடிப்பு. துடி துடிதுடிப்பு. துகள் - குற்றம்.
ஞானம் தருவான்; நலந்தந்து மோன நவில் நிலையை
சனம் தராவகை காட்டிடு வான்;இவ் விரும்புவியில்
கானம் புகழ்சொலும் ராம சுரத்குமார் காலடியை
ஈனம் தவிர்வதற் கேசென்றுபோற்றி இறைஞ்சுமினே.
நவில் - பயிலும். கானம் புகழ் சொலும் - பாட்டுக்கள் புகழை விரிக்கும்.
கண்ணிலே கண்டதுபொய்யென்றறிந்து கருத்தொன்றியே
நண்ணுவார் நல்லவர் என்பதை நாளும் நவிலுபவன்,
விண்ணிலே காணா வியன்இன்பம் ஈயும் விரகறிவான்
தண்ணரு ளார்ராம் சுரத்குமா ரென்னும் தவஅரசே.
விரகு - உபாயம், ஏர் அணவ- அழகு பொருந்த, சீர் அண் - பெருமை பொருந்திய.
பூரணத் துள்ளே பரிபூ ரணமாம் பொருளினைநன்
கேரண வச்சொலும் யோகியை மோனம் இசைந்தவனைச்
சீரண் அருணைத் திருத்தலத் தில்கண்டு சேர்ந்திடலாம்,
பேரருள் ராம சுரத்குமார் என்னும் பெரியவனே.
சொல்லுக் கடங்காச் சுகபோகம்
மெய்ஞ்ஞானம் தோற்றுமக்கால்
புல்லும் எனஉண்மை சொல்லுகின்
றான்இந்தப் பூவுலகில்