இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. அஞ்சனையின் அருந்தவப் புதல்வனே அனுமந்தராயனே
மந்த மாருதம் தந்த மைந்தனே மாருதி
புத்தி, யுக்தி, சக்தி சித்திகளில் வலியவனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே
2. காலைக் கதிரவனை கணியென்று பறிக்கத் தாவிய
வால் அறிவனே, வானர வீரனே, வானவனே
மூலத்தில் பிறந்த முதல்வனே
ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே
3. ஆதவன் பாடம் சொல்ல முன்னின்று பின்ஓடி
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஓதாமல் உணர்ந்த
வாயு புத்திரனே ராமனுக்குப் பிரிய வானரனே
ஆதி வியாதி ஹரராம ஆஞ்சனேயனே