பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாங்கருக்கு உறக்கம் சொக்கியது; வேண்டியதும் வேண்டாததுமான நினைவுகளின் உளைச்சலில், மன உலைவு 'டென்ஷன் மிகுதியடைய, அதன் எதிர்விளைவாக, ஒர் அயர்ச்சி மிஞ்ச, இப்போது தூங்கி ஏழ வேண்டுமென்ற உந்துதலே ஏற்படுத்திற்று. ஆனால், மீண்டும் அந்தப் பொல்லாத அந்தி மாலைப் பொழுது அவருடைய உள்மனத்தில் உட்புயலை ஏற்படுத்திவிடவே, சாய்மானத்தில் கற்சிலையாகச் சாய்ந்தார்!-மனம் எடுப்பார் கைப்பிள்ளே என்பது சரியாய்த்தான் இருக்கிறது!- ரஞ்சனியை, உயிரினும் இனியவளான ரஞ்சனியை நினைத்த நெஞ்சிலே, கேள்வி முறையில்லாமல் மகேஷசம் பாயவே, ரத்த நாளங்கள் துடிக்கலாயின. ஈஸ்வரா!'- தியானநிலை நீடித்தது. மனத்துக்குச் சற்றே மாறுதல் கிடைத்தால் தேவலாம். ரேடியோவைத் திருப்பினால், அங்கே கங்கைக் கரையோரமும், கன்னியர்கள் கூட்டமும் நீர்த்துளிப்படுகிறது! முற்பகலில் அன்றைக்குப் பார்த்த கேட்ட அனுபவித்த பாரதாஞ்சலியின் ஒளி - ஒலிச் சிதறல்களும் அவருக்கு ஆறுதல் தரவே செய்கின்றன.

படு நாசூக்காகக் கொட்டாவி விட்டார் மகேஷ்.

பொன்னான் சந்தர்ப்பம்,

இனி ஒரு வினாடிகூட தூங்காமல் தப்ப இயலாது தான். ரஞ்சித்தின் கெட்டி அற்ப சொற்பமானதல்லவே!- "மகேஷ், நான் ஒரு பத்து நிமிஷம் மாடிக்குப் போய்த் திரும்புவேன். நீங்க ஒரு காரியம் செய்யுங்க: நீங்க கீழே என்னேட ரூமிலே, என்னேட மெத்தையிலே கொஞ்ச நேரம் படுத்து எழுந்திருங்க, உங்களோட மிஸ் ரதி அடுத்த அறையிலே என்னுடைய ரஞ்சனியின் பட்டு மெத்தையிலே சற்று நாழி ஓய்வு கொள்ளட்டும்! எப்படி என் ஐடியா?”

"அருமையானதுங்க, ரஞ்சித்: ரெண்டு கல்லிலே ரெண்டு மாங்காய் அடிச்சிட்டீங்க! உங்களுக்கும் உறங்

78