பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பரிசுப் பொருட்களால்
கணவன் மனைவி சர்ச்சை !

 ழக்குரைஞராக வருவாய் தேடப் புறப்பட்டுத் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியடிகள், அங்கே உள்ள இந்தியர்கள் எல்லாம், ஆங்கிலேயரின் நிறவெறிச் சட்டங்களுக்குப் பலியாகி அவமானப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி, அந்த ஆட்சியைப் பணியவைத்து, அந்த இந்தியர்களை வெள்ளையர்களுக்குச் சமமாக உரிமைகளை அனுபவிக்கச் செய்து மானத்தோடு வாழவைக்கப் பாடுபட்டதைக் கண்ட தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்தியாவுக்கு மீண்டும் திரும்பிடும் காந்தியடிகளது குடும்பத்தை வழியனுப்பிட ஒரு பெரும் பாராட்டு விழாக் கூட்டத்தை நடத்தினார்கள்.

தென்னாப்பிரிக்க மக்களிற்கு காந்தியடிகளுடைய குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லை. ஆனால் அவர்கள் இந்தியாதிரும்புவதையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவருக்கு விடை தந்து வழி அனுப்பிடவே அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்த வழியனுப்பும் விழாவில், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். அன்னை கஸ்தூரிபாய்க்கு ஐம்பத்திரண்டு பவுன் மதிப்புள்ள ஒரு நெக்லசைப் பரிசுப் பொருளாக அன்புடன் வழங்கி, அவரையும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.