பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூல் முகம்

கருமுகில் அனைய வடிவமும் செய்ய
கண்மலர்க் கருணையின் எழிலும்
திருவளர் மார்பும் பங்கயக் கரமும்
திருநடம் புரியும்இங் கிதமும்
மருவளர் வெண்ணெய் அருந்திய வாயும்
மகிழ்ந்திடு முறுவலின் இயல்பும்,
இருபொழு தின்னும்என் இதயம்உற்று ஆளும்
தாளும்,எந் நாளும்நான் மறவேன்.3

- வில்லிபுத்தூராழ்வார்

'சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’ என்றவை இரட்டைக் காங்பியங்கள். இவை ஒரே காலத்தில் இரண்டு பெரிய நல்லிசைப் புலவர்களால் இயற்றப் பெற்றன. இவற்றைப் போலவே ஒரே காலத்தில் (1993-1994) பிள்ளை உலக ஆசிரியர் அருளிச் செய்த மணிப் பிரவாள நடையிலுள்ள நவவிதசம்பந்தம்’, ‘அர்த்தப் பஞ்சகம்’ என்ற இரண்டு இரகசியங்கட்கும் சிற்றறிவுடையேனான அடியேன் ஒருவனால் விளக்கம் எழுதப்பெற்று வெளியிடப் பெற்றன. 'நவவிதசம்பந்தம்' எழுதப் பெற்றமைக்கு ஒரு சிறு வரலாறு உண்டு. அந்த வரலாற்று நிகழ்ச்சி எம்பெருமான் ஏழுமலையானால் ஏற்படுத்தப் பெற்றது.4 அந்த நூல் முற்றுப் பெற்ற நிலையில் 'அர்த்த பஞ்சகம்’ என்பதன் விளக்கத்தையும் எழுதுமாறு ஏழுமலையப்பன் பணித்ததாகச் சிரமேற்கொண்டு எழுதி முடித்து வெளியீடு


3. வி. பா : கீசகவதைச் சருக்கம். ஏட்டுப் படி ஒன்றில் காப்பாக உள்ளது.

4. நவவிதசம்பந்தம் - நூல் முகம் காண்க.