பக்கம்:ஆடும் தீபம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

167




அல்லியை
அறிந்தவன் நான்

முன்னம் ஒரு நாள் ஐவர் சந்திப்பின் மூலம் சிறு தொடரொன்றை ஆரம்பித்து வைத்தேன். பெயர்; ஆலவாய் அழகி. இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள்.அவர்களது நல்லமனம் தந்த துணிச்சலின் துணையுடன்தான் ‘ஆடும் தீபம்’ ஒளி காட்டத் தொடங்கியது. ஏறத்தாழ ஓராண்டுக் காலம் அல்லியின் அன்புடன். அழகுடன், துணிவுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாய்ப்புக்கு அடிகோலியவர்கள் எழுத்துலகில் தேர்ந்த அனுபவம் பெற்றவர்கள்; அனைவருக்கும் அல்லியின் அன்பும், நன்றியும், வணக்கமும் உண்டு.

புதிரின் உட்பொருள்தான் வாழ்க்கையின் மகிமை போலும்! இந்நிலைக்கும் நினைவுக்கும் நேரிடைச் சாட்சியமாக அமைகிறாள் அல்லி அழகுக்கும் தீபத்துக்கும் இறுகியபிணைப்பு உண்டு.பாசமும் பந்தமும் இவ்விணைப்பின் வழியேதான் உருவாகும்:வல்லமை பெறும். அல்லியைப் பொறுத்தவரை அவளது அழகு தீபம் ஆனது: கற்பு நெறியும் தீபமாக மாறியது; தீபம் அவளை முழுமையாகக் காத்தது; அவள் தீபத்தைப் பாதுகாத்தாள். அத்தகு சூழலின் விட்ட குறை-தொட்ட குறையின் காரணமாகத்தான். அறையிலும் அம்பலத்திலும் ஆடினாள்: கனவுகளுக்கு மத்தியில் வாழ்ந்தாள்: வளர்ந்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/168&oldid=1389284" இலிருந்து மீள்விக்கப்பட்டது