பக்கம்:ஆண் சிங்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலைகள்


கைலாசம் சிரித்தான்...

நடுத்தெருவிலே நடந்து போகிற போது, ஒருவன் தானாகவே சிரித்துக் கொண்டால் மற்றவர்கள் என்ன வேண்டுமானுலும் நினைக்கலாம் அல்லவா?

அவ்வீதியில் அலை அலையாய்ப் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அழகு நிறைந்தவர்களும், அழ கற்றவர்களும், வர்ணவிஸ்தாரங்கள் மிளிரும் ஆடை அணிந்தவர்களும், வெள்ளை வெளேரெனத் திகழும் உடையினரும்...எத்தனை எத்தனையோ ரகமான தோற் றங்கள்...விதம் விதமான உருவங்கள். பதினைந்து பதி னாறு வயசுக் குமரிகளிலிருந்து ஏழெட்டு வயசுச் சிறுமிகள் வரை தரம்தரமானவர்கள்...

பெண்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் அழகான காட்சியை நீர் பார்த்திருக்கிறீரா? இல்லையென்றால், இறைவன் சிருஷ்டித்துள்ள எத்தனையோ கோடி இன் பங்களில் ஒரு கோடி இன்பத்தை நீர் இழந்துவிட்டீர் என்று கணக்கெழுத வேண்டியதுதான்!.

கைலாசம் அந்த இன்பச் சூழ்நிலையை ரசித்தபடி நடந்தான். அப்பொழுது அவனுக்குத் திடீரென்று ஒர் எண்ணம் எழுந்தது. அதனுல் அவன் சிரித்தான். அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

‘மூஞ்சியைப் பாரு’ என்று தன் தோழியிடம் முனங் கினாள் ஒரு வராக மூஞ்சி.

‘பைத்தியம் போலிருக்குடி!’ என்று முணுமுணுத்து சென்றது ஒரு அசடு.

‘ஐயோ பாவம்!'என்று பேசி நடந்தது ஒரு பர்மாப் பிரதேசம்.'

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/40&oldid=1071145" இலிருந்து மீள்விக்கப்பட்டது