‘விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?’ - பழமொழி.
விரை ஒன்று போட்டு, அதிலிருந்து சுரை முளைக்கச் செய்வது மட்டுமல்ல; பரங்கிப் பூ பூக்க வைத்து, பீர்க்கங்காய் காய்க்கும்படி செய்து, வெள்ளரிப்பழம் பழுக்கும்படி பண்ணுகிற அற்புத வித்தை பூலோகத்தில் நடைபெறுகிறது. அதுதான் சினிமா. - யுகதர்மம்.
விரை தூவு படலம்
டைரக்டர் புரட்யூஸர் ஸ்ரீமான் சோணாசலம் சினிமாப் படம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார். தாங்களும் சேர்கிறோம் என்று சில நண்பர்கள் அவர் கூடப் பணம் போட முன் வந்தார்கள். ஒரு மாதிரியாக, இன்னின்ன ஸ்டார்கள்தான் நடிக்க வேண்டும் என்று பேசி முடித்தார்கள்.
‘ஸேரி, எந்தக் கதையை படம் பிடிக்கலாம்?’ என்று ஆராய்ந்தார்கள். பெரிய எழுத்துப் புராணங்களை யெல்லாம் துருவி ஆராய்ந்து கைவிட்டுவிட்டு, வெற்றி கரமாக ஒடுகிற எந்தப் படத்தையாவது காப்பியடிக் கலாமா என்று ஆலோசிக்கும் நிலையை எய்தினர்.
‘சாகாத காதல் சிறந்த கதை என்று பட்டது. கதைப் பொறுப்பு சோணா அவர்களிடமே ஒப்புவிக்கப் பட்டது. சோணா இரவு பகலாக உட்கார்ந்து அதையும் இதையும் பார்த்து ஒரு தினுசாகக் கதையை உருவாக்கினார்.
கதை ஆச்சு. வசனம் எழுதியாக வேண்டாமா? அதற்கு ஒரு ஆளைத் தேடிப் பிடித்தார்கள். அவர் கதையைப் படித்துப் பார்த்தார்.
22