பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அழகு!"என்று பார்த்து ஆசை கொண்டது பொரி அரிசி.

அந்தக் கோழி பொரி அரிசியைப் பார்த்து. "பொரி அரிசிக்குட்டி, நீ புறப்பட்டது எங்கே?" என்று கேட்டது. பொரி அரிசிக்கு வெட்கம் வந்து விட்டது. "கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்" என்றது.

,மாப்பிள்ளை எங்கே?" என்று சேவல் கேட்டது. "நீர்தாம்" என்று சொல்லி ஒரு நமஸ்காரம் பண்ணிற்று பொரி அரிசி. "எதிரே வா" என்றது கோழி.

பொரி அரிசிக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. நாணிக்கோணி நடை போட்டுக்கொண்டு கோழிக்கு முன்னாலே வந்து நின்றது.

கோழி கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு லபக்கென்று அந்தப் பொரி அரிசியைக் கொத்தி விழுங்கி விட்டது. பொரி அரிசி அதன் தொண்டைக் குள்ளே போகும்போது, "கடைசியில் இப்படியா முடிந்தது நம் கதி!"என்று வருத்தப்பட்டு அழுதது.

எவர் உருவத்தைப் பார்த்தும் நகைக்கலாகாது என்பதைப் புரிந்து கொண்ட பொரி அரிசி, கோழியின் வயிற்றுக்குள் போய்விட்டது