பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 அண்ணல் அநுமன்

குழந்தையை உயிர்த்தமல

டிக்குஉவமை கொண்டாள்; உழந்துவிழி பெற்றதுஓர்

உயிர்ப்பொறையும் ஒத்தாள். (3) பாசத்தால் பிணிப்புண்டு இராவணன் முன் நிறுத்தப்பெற்ற அநுமன் இராவணன் விடுத்த வினாக்களுக்கு கூறிய மறுமொழியில் இராமபக்தியைக் காணலாம். அவன் கூறுவன் :

"அல்லியம் கமலமே அனைய செங்கண்ஒர்

வில்லிதன் துதன்யான்" "

  1. 5 13

"அனையவன் யாரென அறிதி யாதியேல் முனைவரும் அமரரும் மூவர் தேவரும் எனையவர் எனையவர் யாவர் யாவையும் நினைவரும் இருவினை முடிக்க நின்றுளேன்' (முனைவர் - முனிவர்; இருவினை - பெரிய காரியம்: நின்றுளோன் - அவதரித்துள்ளவன்)

"ஈட்டிய வலியும் மேனாள்

இயற்றிய தவமும், யாணர்க் கூட்டிய படையும், தேவர்

கொடுத்தநல் வரமும், கொட்பும், தீட்டிய பிறவும் எய்தித்

திருத்திய வாழ்வும், எல்லாம் நீட்டிய பகழி ஒன்றால்

முதலொடும் நீக்க நின்றான்.”* (வலி - உடல் பலம், யாணர் - புதிது புதிதாக; கொட்பு - சிறப்பு எய்தி - அடைந்து வாழ்வு - அரசுச் செல்வம் பகழி - அம்பு முதலொடு - அடியோடு)

இன்னும் அவன்,

"வேதமும் அறனும் சொல்லும்

மெய்யற மூர்த்தி வில்லோன்”*

19. சுந்தர. உருக்காட்டு - 65 20. சுந்தர. பிணிவீட்டு - 74 21. சுந்தர. பிணிவீட்டு - 75 22. கந்தர. பிணிவிட்டு - 76 23. கந்தர. பிணிவிட்டு - 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/139&oldid=1361316" இலிருந்து மீள்விக்கப்பட்டது