இராம தூதன் 117
என்ற குறளால். வற்புறுத்துவார், வள்ளுவப் பெருந்தகை, இராவணன் விடுத்த வினாக்களுக்கு அநுமன் விடையிறுத்த பாங்கினால் இவற்றை அறியலாம். இராவணன் விடுத்த வினாக்கள் : என்இவண் வரவுநீயாரை" என்று வினவியபின்,
"நேமியோ? குலிசியோ? நெடுங்க ணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பஃறலைப் பூமிதாங்கு ஒருவனோ? பொருது முற்றுற நாமமும் உருவமும் கரந்து தண்ணினாய்' "
(நேமி - சக்கரப்படை (திருமாலோ?) குலிசி - வச்சிரப்படை (இந்திரனோ?) கணிச்சி - சூலாயுதம் (சிவபிரானோ?); தாமரைக்கிழவன் - நான்முகன்; பூமிதாங்கு ஒருவன் - ஆதிசேடன், பொருது முற்றுற போர் செய்து அழியுமாறு)
“நின்றுஇசைத்து உயிர்கவர் நீலக் காலனோ?
குன்றுஇசைத்து அயில்உற எறிந்த கொற்றனோ? தென்திசைக் கிழவனோ? திசைநின்ற ஆட்சியர் என்றுஇசைக் கின்றவர் யாருள் யாவன்நீ?" (காலன் - யமன், குன்று - மலை; அயில் - வேல்; கொற்றவன் - முருகன், தென்திசைக்கிழவன் - அகத்திய முனிவன்; திசைநின்று ஆட்சியர் - திக்குப் பாலகர்கள்) "அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் வந்துற விடுத்ததோர் வயவெம் பூதமோ? முந்தொரு மலருளோன் இலங்கை முற்றுறச் சிந்தெனத் திருத்திய தெறுகண் தெய்வமோ?”*
(அந்தணர் - முனிவர்கள்; ஆணை - கட்டளை, வந்து உற வந்து சேரும்படி சிந்து என அழித்துவிடு என்று)
"ஆரைநீ?" என்னைஇங்கு எய்து காரணம்? ஆருனை விடுத்தவர்? அறிய ஆணையால் சோர்விலை சொல்லுதி"
17. யுத்த பிணிவீட்டு - 69 18. யுத்த பிணிவீட்டு - 70 19. யுத்த பிணிவீட்டு - 71 20. யுத்த பிணிவீட்டு - 72 21. யுத்த. பிணிவிட்டு - 73