பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 அண்ணல் அநுமன்

(1) தன்னால் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் அநுமனை அடைகின்றான், அங்கதன். இருவரும் தாரையிடம் வருகின்றனர்." நேரிட்ட நிலைக்குத் தாரை கடிகின்றாள்; பழிக்கின்றாள்' ஒருநிலையில் இலக்குவன் கிட்கிந்தை நகரில் பிரவேசிக்கின்றான்' அப்போது அநுமன் கூறிய யோசனை: இலக்குவன் புயவலி மிக்கவனாயினும் அவன் மனம் மலர்போல மென்மையுடையது. பெண்பாலாகிய தாரை சென்று சுக்கிரீவனது அரண்மனை வாயிலில் நின்றுவிட்டால், மகளிரை எதிர்த்துப் பொருது கொல்ல லாகாது என்ற கொள்கையை உணர்ந்த அப்பெருமகன், அவ்வழியைக் கண்ணெடுத்தும் பாராமல் விலகிச் சென்றிடுவன்; இது தக்கதோர் உபாயம் என்று அநுமன் சமயோசிதமான ஆலோசனையைக் கூறினன். அங்ங்னமே தார்குழலார்களுடன் தாரை சென்று இலக்குமணனை விலக்கினாள்:”

மெல்லியலாரின் சேனை இலக்குவனைச் சூழ்கின்றது. அவர்தம் காற்சிலம்புகள் போர்க்குரிய பலவகை வாத்தியங் களாக ஒலிக்கின்றன; அல்குலாகிய போர்க்கு ஏற்ற பெரிய தேர் அவனைக் கவிந்துகொண்டு நிற்கின்றது. மகளிரின் கண்கள் வேற்படைகளாகவும், வெம்புருவம் விற்படை களாகவும் அமைந்துவிடுகின்றன; இங்ங்னம் மெல்லியர் வளைந்த சேனையால் பெருவீரனான இலக்குமணனின் சீற்றம் ஒதுங்கிப் போயிற்று. தன் முகத்தை மாற வைத்துக்கொண்டு திரும்பியதோடன்றி அவர்களைக் கண்னெடுத்துப் பார்க்கவும் அஞ்சினான்."

20. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 27

21. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 28

22. கிட்கிந்தை - கிட்கிந்தைப் - 41

23. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 43, 44

24. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 47. வனவாச காலத்தில் வானர அரசனான சுக்கிரீவன் பிராட்டியின் அணிகலன்களைக் காட்டிய போது இலக்குவன், "யான் பிராட்டியின் தோள் வளையங்களைக் கண்டறியேன்; நாடோறும் அப்பெருமாட்டியின் திருவடிகள்ளப் பணிதலால் அவருடைய நூபுரங்களை அறிவேன்” என்ற வான்மீகம் ஈண்டுக் கருதத்தக்கது.

25. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/149&oldid=1361337" இலிருந்து மீள்விக்கப்பட்டது