பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

209

சேர வருவீரே! சேர வருவீரே!
வீர ரெல்லாம் வேகமாகச் (சேர)
சேர சோழத் தென் பாண்டி நாட்டார்
தீர காவியம் தீட்டிடும் போரில் (சேர)

சரணம், டால்மியாபுரம் பெயர் மாற்றங்குறித்து 5 அடிகள்.

இந்தப் பல்லவி, அனுபல்லவியை நினைவில் வைத் திருந்து, பிறகு ஒருநாள், அண்ணா முன்பு சொல்வி யிருந்ததை மறவாமல் 4 சரணங்கள் சேர்த்து, ஒரு பாடல் எழுதினேன். அதைத் “திராவிடநாடு” ஏட்டின் முதல் பக்கத்தில் 17.7.1960ல் வெளியிட்டுச் சிறப்பித்தார் அண்ணா.

வாழும் வடக்கின் வஞ்சகச் செயலால்
தாழும் தெற்கினைச் சமன்செயும் போரில் (சேர)
செந்தமிழ்த் தாயின் சிறப்பினை அழிக்கும்
இந்தித் திணிப்பினை எதிர்த்திடும் போரில் (சேர)
நாட்டை மீட்டிடும் நற்பணி புரிய
வீட்டுக் கொருவர் விரைந்திடும் போரில் (சேர)
உறுதியோடும் நம் உரிமையைக் காக்கக்
குருதி சிந்திடும் ஒருபெரும் போரில் (சேர)

இன்று இருக்கும் சூழ்நிலையில், அண்ணா இருந்தால், இந்தப் பாடலையே பாடச் சொல்வார் அல்லவா நமது கழக மேடைகளில்? அத்தோடு அண்ணா அடிக்கடி ஆசைப் பட்டதுபோல, கைதேர்ந்த நாட்டியப் பேராசிரியர் ஒருவரைக் கொண்டு பயிற்சி கொடுத்து, ஆசான் அவர்களே நட்டுவாங்கம் செய்து, ஜதி சொல்லிப் பதம்பாட்டி அலாரிப்பு, ஜதீஸ்வரம், தில்லானா, வர்ணம்-எல்லாம் முடித்து, அபிநயம், முத்திரைகளுடன் நாட்டியமாகச் சில பெண்மணிகள் இப்பாடல்களுக்கு வடிவம் தந்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்!

அ.-14