பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. நோபல் பரிசு பெற்ற
‘கீதாஞ்சலி’ கூறும் வாழ்வியல்

‘கீதாஞ்சலி’யில் கவிஞர் வாழ்வு

எங்கே மனம் அச்சமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்ந்திருக்கிறதோ
எங்கே அறிவு உரிமையுடனிருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய குடும்ப எல்லைகளால்
துண்டு துண்டாகப் பிளவு படாதிருக்கிறதோ
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து
சொற்கள் பிறக்கின்றனவோ
எங்கே சலியாத உழைப்பு
விழுமிய நிலையை நோக்கி நீளுகிறதோ
எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த ஓடை
மூடப் பழக்க வழக்கம் என்னும்
வறண்ட பாலையில் போகாதிருக்கிறதோ
எங்கே என்றும் விரிந்து நோக்கும்
எண்ணத்திலும் செயலிலும்
மனத்தை நீ முன்னின்று அழைத்துச் செல்கிறாயோ
அங்கே, அந்த உரிமையுள்ள இன்ப உலகத்தில்,
என் தந்தையே, என் நாடு விழிப்புறுக.

(கீதாங்சலி-35ம் பாடல்)