பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T@ঠত

ஓர் வானவில்!

நீலவான் நிர்மலமாக இருந் தது முகிற்கூட்டங்கள் திடீ ரென்று அதை மூடிக்கொண்டன:

மின்னல் கீற்றுக்கள் மேகத்தின் முதுகில் வரிவரியாகச் சூடுகள் போட்டன !

மேகங்கள் துடித்து அலறின : கண்ணிர்த் துளிகளை உகுத்து உகுத்து அவை கருத்து விட்டன:

நடுவானத்திலே நடைபெறும் இந்த ரணகளப் போரைக்கண்டு, சூரியன் அச்சப்பட்டது :

ஒருவனை மற்ருெருவன் உலகத் தில் அடித்துக்கொண்டு சாவதைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த் துக் கொண்டிருப்பதைப் போல, அருணனும் இதை உற்று நோக் கிக் கொண்டிருந்தான்.

மனித கூட்டத்தினிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டை யில் நாலுபேர் புகுந்து அமை தியை நிலைநாட்டுவதைப் போல -மழையும் ஒருகணம் அமைதியை நிலைநாட்டியது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/30&oldid=564474" இலிருந்து மீள்விக்கப்பட்டது