பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔岛

செத்துப்போகும் நினைவாற்றல் மனித சமுதாயத்திற்கு இருக்கும் வரையில் அவர் என்றும் வாழ்கிரு.ர்.

கரைந்து வருகின்ற நிலவுக்கொரு கவிஞன் என்று ஒர் அறிஞன் கூறுகிருன்.

கறையற்ற அறிஞனுக்கு காலம் என்று நான் பெயர் சூட்டுகிறேன்.

யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு *நடத்து உன் நாடகத்தை’ என்று காலம் கூறுகிறது.

அதைக் கடவுள் பக்தன் அனுதியென்கிருன், *இதற்காகவே பிறந்தேன்’ என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி-காலத்தின் வேகம் என்று ஏன் கூறக்கூடாது?

பிறக்கப்போகும் கருவுக்குள் அறிஞர் அண்ணுவினுடைய நினைவுக் கொப்புழ் கொடி வழியாக உணவோடு உணவாகசெல்கிறதென்ருல்,

இது பத்து மாதத்தில் நடக்கின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி வேறென்னவென்று கூறுவது?

விதியென்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிருன்.

அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப் புடையதை மதி என்று சித்தாந்தி கூறுகிருன்,

மதிக்கும் விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம் அண்ணுவை இரு சாராருக்கும் அளிக்கிறது.

சிற்பியினிடம் கிடைத்த கல், உளி போராட்டத்தில் துவண்டும் இளைத்தும் பிறகு உருவம் பெருகிறது.

விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணு சிற்பியின் கல்பெறும் உருவம் போல வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிரு.ர்.

விதி விமர்சனம் செய்கிறது-மதியும் விளக்கம் கூறுகிறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/14&oldid=564458" இலிருந்து மீள்விக்கப்பட்டது