பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7?

எங்கள் கூத்தையும்.ஆட்டத்தையும் பார்க்காமல் இந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருக்கிருயே: இதனால் யாது பயன் என்று கேட்டனர்:

அதோ அந்தப் பறவையின் வடிவத்தால்-வரவால்தோற்றத்தால்-எல்லா உயிரும் மகிழ்ச்சியோடு இருக் கின்றன!

அந்தப் பறவையின் பொலிவிலே உங்கள் கண்கள் மயங்கவில்லையானல், அது உங்களுடைய விழிகளது குற்ற, மென்றேன்!

அது ஒரு சோம்பல் பிடித்த பறவை என்று அவர்கள் கூறினர்கள்.

"அது வான வழியாக வந்த அறிவுத் தூதன் என்று நினைக்கிருயா?’ என்று என்னேக் கேட்டார்கள்!

எனது எண்சாண் உடம்பும் அப்போது வணக்கத்துடன் "ஆம்" என்றது!

'உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத் தோலை நசுக்கினலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்:

'உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும் நீ பொய்யைத் தவிர உண்மையைப் பேசமாட்டாய்” என்று ஊதாசினம் ஆடினர் :

என்னுடைய வார்த்தைகள் உங்கள் தலைகட்கு மேலே ஒளிந்து கொண்டிருக்கும் விண்மீனப்போல்-இல்லையென்ருல் உங்களுடைய உடம்பில் ஒடிக் கொண்டிருக்கும் உயிரைப் போல உண்மையானதுதான்.

உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன் யாழை மீட்டு கின்றபோது வரும் உண்மையான சுவர ஜாலங்களைப் போல் அப்பழுக்கற்றவை,

கட்டாந்தரையைக் கழனியாக்க நிலத்திலே தோய்ந்து உளடளச்கும் கார்முளையைப்போல-என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன !’ என்று கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/78&oldid=564522" இலிருந்து மீள்விக்கப்பட்டது