பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

எந்த விதையால் அண்ணு தன்னை மனித தோட்டத்தின் நடுவில் நிழல்தரும் தருவாக ஆக்கிக்கொண்டார்:

அந்த விதையை முதன் முதலில் போட்ட காலத்தை தான் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரக விதையால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிருன்,

கலை, ஓவியம், இசை, பேச்சு, எழுத்து இவை அத்தனையும் மனித தோட்டத்திற்கு நடுவில் விழுகின்ற விதைகளாகும்.

எழுத்தை நினைக்கும்போது ஒரு அறிஞனுடைய நினைவு. வருகிறது. பேச்சு, ஓவியம், இசை, இவற்றை நினைக்கும்போது. ஒவ்வொருவருடைய நினைவு நமக்குத் தோன்றுகிறது.

ஞாபகம் என்பது காலத்தின் வேராகும்.

அண்ணுவை நினைக்கும்போது எது நினைவிற்கு வருகிறது?

பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா? அருளா?

எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில் இப்படி ஞாபகம் வருகிறதென்ருல் இதற்குப் பெயர்தான் জ্ঞয়ঞ্জ ঞ্জ ?

சர்வ கல்லமையா?

சர்வ வல்லமை என்பது இறைவனுக்குத்தான் பொருத்தும் என்று, எண்குண ஆய்வாளர்கள் குறிப்பிடு கிருர்களே என்று கேட்டால், முழு மனிதன் இறைவனே விட்டுக் குறையணுகவாப் பிறந்தான்?

இறைந்து இருப்பவன் இறைவனென்ருல், எல்லா வல்லமையிலும் இறவாது இறைந்திருப்பவன் அறிஞன் என்று. வேதாகமம் கூறுகிறதே!

இந்த இடத்தில்தான், காலம் எப்படி அண்ணுவால் தன்ன மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது என்றும், அண்ணுவும் காலத்தால் எப்படிக் கவனிக்கப் படுகிருர் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/13&oldid=564457" இலிருந்து மீள்விக்கப்பட்டது