பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5怖 ஆயினும் நீர்நிலை இங்கு ஒன்றுமில்லாத இடத்திற்கு இப்பெயர் வருவா னேன் என்று கேட்கலாம். சுமார் 300 வருடங்களுக்குமுன் சென்ன ப்ட்டணம் எப்படியிருந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் இந்த சந்தே கம் நிவர்த்தியாகும். அக்காலத்திய படம் (Map) ஒன்றை எடுத்துப் பார்த்தால், தற்காலம் பிராட்வே என்று சொல்லப்பட்ட வீதி வழியாக ஒரு சிறு அருவியானது ஒடிக்கொண்டிருந்தது என்பதை அறிவோம் அது கோட்டையின் வடபுறமாக அச்சமயம் பாய்ந்துகொண்டிருந்த கூவத்தின் ஒரு கிளேயிற் போய்க் கலந்ததைக் காணலாம். பிறகு ஒடக்கால் என்று கூறப்பட்ட வீதியானது அச்சிற்றருவியிலிருந்து ஒடங் கள் கட்டிவைப்பதற்காக. ஏற்படுத்தப்பட்ட கால்வாயாகும். வர்த்தக ஒடங்கள் இரவுகளில் தங்கும் இடங்களிலெல்லாம் சாதாரணமாக குச் சுக்காரிகள் (இழிகுல மாதர்கள்) வசிப்பது வழக்கமாம். பிறகு இவ் வாய்க்காலும், இச்சிறு அருவியும் அடைக்கப்பட்டபோது, அந்த இடத் திற்கு பிராட்வே எனும் பெயராகி, இந்த இடத்திற்கு ஒடக்கால் வீதி என்று பெயராது. - : இனி சில நாணயங்களின் பெயர்களை ஆராய்வோம் (52) வராஹன் என்பது சில வருடங்களுக்கு முன்பாக 3; ருபாயாக மதிக்கப்பட்டிருந்தது. இது மத்திம காலத்தில் வழங்கிய ஒரு பொன் நாணயத்தின் பெயராம். இதற்கு அப்பெயர் வந்ததற்குக் கார ணம் அதன் பேரில் ஒரு வராஹத்தின் உருவம் அமைக்கப்பட்டிருந்த தாகும், வராஹம் என்ருல் பன்றி. இது சாளுக்கியர்களுடைய பிருதாம். தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சாளுக்கியர்கள் அரசாண்டதை நாம் சரித்திர மூலமாக அறிகிருேம். ஆகவே இந்த வராஹன் எனும் நாணய மானது அவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கலாயிற்று. (33) சவரன். இது ஆங்கிலேயர் வந்த பிறகு இந்நாட்டிற்கு வந்த நாணயமாம். சவரன் என்பது சாவ்ரன் எனும் ஆங்கில மொழி யின் திரிபாம் சாவ்ரன் என்ருல் அரசன் என்று ஒரு அர்த்தமுண்டு. அந்நாணயத்தின்மீது அரசருடைய உருவம் அமைக்கப்பட்டதால் அப் பெயர் வந்ததாம். . * , ^ - ' - > (77) LearL இது ಟೆ೦೬ இந்தியா கம்பெனியார் (East India Co) இங்கு ஆண்ட காலத்தில் வழங்கிய ஓர் பொன் நாணய