பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ைைல் சாதாரணமாக டொப்பி அணிகிருன். மகம்மதிய மதத்தைச் சார்ந்தால் குல்லாயணிகிருன். இவ்விரண்டு சொற்ருெடர்களுக்கும் தற்காலம் ஏமாற்றுதல் எனும் அர்த்தமிருப்பதைக் காண்க. (40) குத்து விளக்கு என்பது குத்து+விளக்கு பூர்வ காலத் தில் மண்ணுல் கட்டப்பட்ட வீடுகளின், தரையில் தண்டுகளைக் குத்தி வைக்கப்பட்ட விளக்குகளுக்குப் பெயராயிருந்தது. (41) எச்சிற்கல்லை எச்சில்--கல்லை. கல்லையென்ருல் இலையி ஞற் செய்த கலம் என்று அர்த்தமாகிறது. தற்காலம் இது சாப்பிட்ட இலக்கு உபயோகிக்கப்படுகிறது. (42) அப்பாணை அப்பன் + ஆணை; தகப்பனுருடைய உத்தி ரவு அல்லது கட்டளை. தற்காலம் இப்பதம் சத்தியம் என்கிற அர்த்தத் தில் உபயோகிக்கப்படுகிறது. மொழியின் பூர்வோத்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நமது பூர்வீக தமிழர்கள் தகப்பனுருடைய கட்ட ளேக்கு எவ்வளவு கெளரவம் கொடுத்தனர் என்பதை அறிவோம். (43) அத்தான், அம்மான்ஜி. அத்தான் என்பது அத்தை மகன் என்பதாம். அம்மான்ஜி என்பது அம்மான்--சேய் = அம்மான் மகன் என்பதாம், பின்கண்ட பதம் சாதாரணமாக பிராம்மணர்களுக் குள்தான் வழங்கப்படுகிறது. (44) ஓரகத்தி, சக்களத்தி, ஓரகத்தி என்பது ஓர் அகத்தில் வாழ்பவள் என்று பொருள்படும். ஒரே குடும்பத்தில், ஓர் வீட்டில் வாழும் அண்ணன் தம்பிகளுடைய மனைவிகளுக்கு அக்காரணம் பற்றி ஓரகத்தி எனும் பெயர் வழங்கலாயிற்று. சக--களத்தி களம் என்ருல் மனைவியாம். சக்களத்தி என்ருல், தன் புருஷனுடைய இரண் டாம் மனைவியைக் குறிக்கும் பதமாயிற்று. |45) மனைவி என்னும் மொழி மனையிலிருப்பவளைக் குறிப்ப தாம். அகமுடையாள், அகத்திலிருப்பவள், வீட்டிலிருப்பவள் என் பதைக் கவனிக்க. அகம்= வீடு இல்லாள் என்பதையும் பார்க்க; இல் = வீடு. . . . . . . . . . . . - (46) காப்பு என்பது தற்காலத்தில் கையிலணியும் ஓர் ஆபர. ணத்தைக் குறிக்கும். காப்பு என்ருல் ரட்சை என்று பொருளாம். பூர்வ காலத்தில் இரட்சையாக விவாக காலத்திலோ, யாக காலத்திலோ மற்