பக்கம்:அமல நாதன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சிற்றப்பன் சக்திப்பு

பு ல ளு யி ற் று. அக்கிழவன் விளக்க உபு:ஆம் மாசேறிய ஆடையும் கொண்டிருந்தான் அமல் நாதனுக்கு. ஐயமும் உள்ளத்தில் பிறந்தது. இவன் ஒரு வேளை இவ்வீட்டுப் பணியாளனுக இருக்கலாமே என்றுகூட எண்ணி விட்டான். கடைசியில் இந்த அலங்கோல மனிதன் கன் இளைய தந்தை என்பதும், அந்த வீட்டுக்குரிய தலைவன் என்பதும் அறிந்து ஆச்சரியப்பட்டான். தான் கொணர்ந்த கடிதத்தை அவ் விசித்திர மனிதனிடம் நீட்டினன். கடிதம் காட்டில்ை தனக்கு கன்ன்ம ஏற்படும் என்று இருந்த எண்ண்ம் இவன் மனத்திலிருந்து வெளியேறிவிட்டது. தன். சிறிய தந்தையை அறிந்து இக்கடிதம் கொடுக்கப் பெற்ருேமே என்னும் மகிழ்ச்சி ஒரு சிறிதும் அவன் முகத்தில் தோன்றவில்லை.

கொடுரசொரூபி அக்கடிதத்தைப் பிரித்து வாசித்தான். அதில் உள்ளடங்கிய பொருளைச் சிறிய வன் உணர்ந்திருப்பானே என்று சந்தேகித்தான். சிறுவன் உள்ளத்தில் செல்வத்தில் பங்கு கிடைக்கும் என்னும் எண்ணம் பதிந்து இருக்குமோ என்று அறிந்துகொள்ள அக்கிழவன் அவாவினன். ஆகவே, இளங்காளையை நோக்கி, நீ ஏதேனும் என்னிடம் இருந்து சொத்து, சுதந்தரங்களைப் பெற எண்ணியுள்ளாயோ? ' என்றும் உசாவினன். சிறுவன் கிறிதும் அஞ்சாது அசட்டையாக நான் அந்த எண்ணம் கொண்டே இங்கு வந்தேன். என்ருலும், என் சிறிய தந்தையார் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. என்று கூறினால், அதனே அவ்வாறே விட்டுக் கொடுத்து இப்பொழுதே வெளியேறவும் சித்தமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/16&oldid=1228737" இலிருந்து மீள்விக்கப்பட்டது