பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. அண்ணா ஒரு காலம்!


அண்ணா, ஒரு காலமென்று மகுடம் சூட்டி விட்டேன்.

அந்த மகுடத்தில் பதிந்திருக்கும் மணிகளை, உங்கள் முன்னால் வைக்கின்றேன்.

ஒர் எல்லையற்ற மனிதனை, எல்லையற்றக் காலத்தோடு இணைக்கின்றேன்.

எனது இணைப்பைச் சரியாகச் செய்கின்றேனா என்று, என்னை நானே, எண்ணிப் பார்க்கின்றேன் - அஞ்சுகின்றேன்.

காலம் தோன்றியதுமில்லை. முடிந்ததுமில்லை.

அதன் சிறகுகளில், வினாடிகள் இறகுகளாக அமைந்திருக்கின்றன.

காலம் எங்கே தோன்றியது என்று, இடத்தையும் குறிப்பிட முடியவில்லை.

அது எப்பொழுது பிறந்தது என்று, முளையாகத் தன்னைக் எண்ணி கொள்கிறான்.

சக்தியுள்ளவன், காலத்தின் முதல் முளையாகத் தன்னை எண்ணி கொள்கிறான்.

சக்தியற்றவன், முளைத்து முடிந்தவனாக நினைத்துக் கொள்கிறான்.