பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி!


நீங்கள் அவனைப் பார்த்தீரோ,

அவன் ஒரு நீர்வீழ்ச்சி,

அது ஒரு நீர்த்துளி,

தெய்வத்தின் ஈரத்தால் நெய்யப்பட்டது,

அதன் இழைகள், காலத்தை வெல்லும் பண்பாடுடையன,

நீர்வீழ்ச்சிக்கு மறுபெயர் அண்ணா.

அதோ அது; தாயகத்தின் மடிமீது விழுகிறது,

அதனுடைய சிதறலில், ஒளி போர் செய்கிறது!

இப்போது துளிகள் அத்தனையும் - வண்ணச் சொட்டுகள்,

நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது!

ஞானி, அதன் முடிவை சிந்திக்கிறான்!

அது மேலே இருக்கும்போது - பலத்தோடு வழிகிறது.

நில இதயத்தில் அது விழும்போது, பூ போல மென்மையாகிறது.

அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை,

நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்,