பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவருக்குக் காஞ்சித்
தலைவனே
கடவுள் ஆகிறார்

அண்ணா என்னும் அந்த
அன்பு தெய்வத்தை - இவர்
பண்ணார் தமிழில்
பூசிக்கும் போது -
வாசிக்கும்
என் நெஞ்சம்
நிறைய இடங்களில்
நெகிழ்கிறது;
நெகிழ்ந்து மகிழ்கிறது!

படிக்கப் படிக்க
வார்த்தைகள்
இனிக் கின்றன;
விழிகள்
பனிக்கின்றன!

அண்ணாவை இவர்
காதலித் திருக்கிறார்!
அதன் காரணமாக - மனம்
பேதலித் திருக்கிறார்!
கட்சிகளைக் கடந்து
ஆதரித் திருக்கிறார் - அண்ணா
மூதறிஞர் என்பதைப்
பல பக்கங்களில்
மூதரித் திருக்கிறார்!

கலைமணி
கைத்தட்டி அழைத்தால்