பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கைக் குழந்தை போல் - தமிழ்
கை கட்டி -
முன் வந்து நின்று அவர்
மெய் கட்டி
மெல்லக் கொஞ்சுகிறது!

சிலர்
கவிதையை
உரை நடையாக
எழுதுங் காலத்தில் -
கலைமணி!
உரை நடையைக்
கவிதை யாக
வரைகிறார்:

எவரும்
படித்துப்
புலவ ராகலாம்;
கடவுளின் கொடையாகப் பெற்றவன்தான் -
கவிஞனாக முடியும்!
புலவனாகவும் -
கவிஞனாகவும் -
மலர்ந்து நிற்பவர்...
கலைமணி
நிறையக்
கற்றிருந்தும் -
நிறை குடமாக
நிற்பதா லேயே -
கலைமணியை

நான் காதலிக்கிறேன்!