பக்கம்:இருட்டு ராஜா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88இருட்டு ராஜா


இரவில் அது மூலைக்கு மூலை இடியின் உறுமல் மாதிரிப் புரண்டு ஒலித்தது.

வீட்டுக்கள் துாக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்த தங்கராசு நினைத்துக் கொண்டான். “முத்துமாலை புதுசா என்ன ஹ்யூமரைக் கண்டு கொண்டானோ தெரியலே, இப்படி ரசித்துச் சிரிப்பதற்கு.அவன் விசித்திரமான ஆசாமியாத்தான் இருக்கான்!” அவன் அம்மா “எதுக்குத்தான் கரிமுடிவான் இந்தப் போக்குப் போறானோ அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப் போகுது கூடிய சீக்கிரம்” என்றுமுணு முனுத்தாள்.


12

அம்மன் கோயில் கொடை நடந்து முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.

கோயிலின் முன்னே போடப்பட்டிருந்த பெரிய கொட்டகைப் பந்தல் இன்னும் பிரிக்கப்படவில்லை. சிரத்தையோடு சிங்கார வேலைப்பாடுகள் செய்யப் பெற்றிருந்த அலங்காரப் பந்தல், தட்டு தட்டாக (படிப்படியாக) அடுக்கி, நடுவில் ஒரு “தெப்பக்குளம்” (சதுர அமைப்பு) தென் இரு பக்கத்திலும் “கிணறுகள்” (வட்ட அமைப்புகள்) கொண்டு, பார்ப்பதற்கு வெகு அழகானது.

ஒரு வாரம் கோயில் முன்னால் அழகுப் பந்தல் நிற்கட்டுமே என்று விட்டு வைத்திருந்தான் பந்தல்காரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/90&oldid=1143526" இலிருந்து மீள்விக்கப்பட்டது