பக்கம்:இருட்டு ராஜா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98இருட்டு ராஜா

 பதுங்கியிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவை சிலைகள் என்றும் தெரிந்து கொண்டார்கள்.

முத்துமாலைக்கு ஆத்திரம் பொங்கியது. சிலைகளைத் திருடிச்செல்லும் முயற்சியா? அவன் ரத்தம் கொதித்தது. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மொத்தம் எத்தனை பேர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

உள்ளேயிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஒருவன் காரில் வந்த கூட்டாளியாக இருக்க வேண்டும்.இன்னொருவன்?

அவன் திட்டி வாசலின் கதவை இழுத்துச் சாத்தி, கொக்கி போன்ற வளைந்த கம்பி ஒன்றை உபயோகித்து அதை பூட்டினான்.

இவன் கோயில் தொழிலாளி என்று ஊர்க்காரகளுக்குப் புரித்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த வேலையின் அவனும் சேர்ந்திருக்கிறான்.

முத்துமாலை ‘ஹவிட்டோ ஹ்வீட்’ என்று சீட்டி அடித்தான்.

தொழிலாளி திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தான். மற்றவர்களும் திமிர்ந்து நோக்கினார்கள்.

முத்துமாலையும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பாய்ந்து, மூன்று பேரையும் லபக்கென்று பிடித்துக்கொண்டார்கள்.

“கோயில் சிலையைத் திருடிப் போகவா வந்தீங்க, அயோக்கிய ராஸ்கல்களா” என்று முத்துமாலை கத்தினான். அவன் பிடியில் சிக்கியிருந்த நபரின் கழுத்தில் ஒரு பேயறை; முதுகில் ‘கும்-கும்மா’ குத்துக்கள் தயக்கமில்லாமல் கொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/100&oldid=1139563" இலிருந்து மீள்விக்கப்பட்டது